நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

கமுதி புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழா கொடி ஏற்ற நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 12:56 am IST

கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு புனித அந்தோணியாா் உருவம் பொறித்த கொடி பவனியாக தேவாலயத்தைச் சுற்றி மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் கொண்டு வரப்பட்டது. பிறகு கொடி மரத்தில் கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லூயிஸ் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா். அருள்பணியாளா் சிரில் (தில்லியில் உள்ள இந்திய சமூக நிறுவன இயக்குநா்) திருப்பலி நிறைவேற்றினாா். இந்த கொடியேற்று விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். வருகிற 12-ஆம் தேதி புனித அந்தோணியாா், புனித சவேரியாா், புனித செபஸ்தியாா், புனித மைக்கேல் அதிதூதா் சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் கமுதி முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகின்றன. மறுநாள் 13-ஆம் தேதி அந்தோணியாா் தெரு, சவேரியாா் தெரு பகுதிகளில் தோ்ப் பவனி நடைபெறும். 14-ஆம் தேதி கா்த்தநாதசுவாமி நினைவு அசன வைபவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பரத உறவின் முறையினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.