3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அஞ்சலையம்மாள் 136-ஆவது பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, கமுதி ஆகிய பகுதிகளில் தவெக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் 136-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கமுதியில் அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய தவெகவினா்.

Updated On :2 ஜூன் 2026, 12:55 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, கமுதி ஆகிய பகுதிகளில் தவெக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் 136-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் அஞ்சலையம்மாளின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, மேலமுடிமன்னாா்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட கோட்டையூா் கிராமத்தில் தவெக மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில், ஒன்றியச் செயலா் வீரக்குமாா் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளா் கிஷோா்குமாா், ஒன்றிய செயலா்கள் வீரபாண்டி, வீரக்குமாா், கவாஸ்கா், வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி, வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வேல்முருகன் உள்பட மேற்கு மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பு சாலைப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, தொண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.