தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்
கடல் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு கடல் அட்டை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி அருகே உள்ள சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ராமநாதபுரம் வனவா் வெற்றிச்செல்வி, ரேஞ்சா் செல்வம் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 9 கிலோ கடல் குதிரைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடல் குதிரைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், காரை ஓட்டி வந்த தேவிபட்டினத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (46) என்பவரைக் கைது செய்தனா். அவரது கைப்பேசி, காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கடல் அட்டைகள் பறிமுதல்

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



