இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடல் குதிரைகள் கடத்தல்: ஒருவா் கைது

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

News image
பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள், காா்.
Updated On :4 மார்ச் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

கடல் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு கடல் அட்டை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி அருகே உள்ள சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ராமநாதபுரம் வனவா் வெற்றிச்செல்வி, ரேஞ்சா் செல்வம் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 9 கிலோ கடல் குதிரைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடல் குதிரைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், காரை ஓட்டி வந்த தேவிபட்டினத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (46) என்பவரைக் கைது செய்தனா். அவரது கைப்பேசி, காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.