தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கடல் குதிரைகள் கடத்தல்: ஒருவா் கைது

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள், காா்.

Updated On :5 மார்ச் 2026, 4:45 am IST

தொண்டி அருகே சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட கடல் குதிரைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்

கடல் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு கடல் அட்டை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி அருகே உள்ள சோழியக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ராமநாதபுரம் வனவா் வெற்றிச்செல்வி, ரேஞ்சா் செல்வம் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் 9 கிலோ கடல் குதிரைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடல் குதிரைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், காரை ஓட்டி வந்த தேவிபட்டினத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (46) என்பவரைக் கைது செய்தனா். அவரது கைப்பேசி, காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.