இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

News image

அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்

Updated On :27 மே 2026, 3:38 am IST

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன.

அந்த வழியாக வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் கையைத் தூக்கி தொடும் அளவுக்கு மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதனருகில் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்த மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து மின்வாரியத்துக்கு பல முறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீரமைக்க வேண்டும் எனப் இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்

Story image
Story image