மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பி.இ., பி.டெக்., 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: காரைக்குடியில் கலந்தாய்வு நிறைவு

2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:32 am

DIN

2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்  ஜூன் 30-ஆம் தேதி இந்த கலந்தாய்வு தொடங்கியது. இதற்கு ஆன்லைன் மூலம் 12,021 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 11,164 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 
கலந்தாய்வின் முதல் நாளில், சிறப்பு ஒதுக்கீடான விளையாட்டுப் பிரிவு மாணவர்களில் 20 பேரில் 16 பேரும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 30 பேருக்கு 24 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 31 பேரில் 20 பேரும் பங்கேற்று, தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர். 
அதில் லெதர் டெக்னாலஜி பிரிவில் 2 பேரும், பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் 5 பேரும், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 132 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 75 பேரும் தேர்வு செய்து, சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
ஜூலை 1 மற்றும்  2 ஆம் தேதி நடைபெற்ற சிவில் பாடப்பிரிவு கலந்தாய்வில் 2,150 இடங்களுக்கு 1,847 பேர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 4,800 இடங்களுக்கு 3,964 பேர் பங்கேற்றனர். ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி வரை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 4,123 இடங்களுக்கு 3,390 பேர் பங்கேற்று சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
கணித பட்டதாரிகள் பிரிவில் 12 இடங்ளுக்கு 4 பேர் மட்டுமே கலந்து கொண்டு கல்லூரியைத் தேர்வு செய்து அனுமதிக்கடிதம் பெற்றனர்.
இந்த ஆண்டு மொத்தம் 1,939 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஏ. இளங்கோ தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.