பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மானாமதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில், குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 6:57 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில், குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலைப் பயணம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை மனிதம் அறக்கட்டளை, மாவட்ட சைல்டு-லைன் துணை மையம், மதுரை சக்தி விடியல் குழந்தைகள் உரிமைகள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த கலைப் பயணம் நடத்தப்படுகிறது.
இக் கலைப்பயணத்தின்போது, சக்தி விடியல் குழந்தைகள் உரிமை இயக்க கலைக் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள், குழந்தைகள் உரிமைகள் குறித்து வீதி நாடகங்கள், ஒயிலாட்டம், பறையாட்டம், மாட்டுக்கொம்பு ஆட்டம், குழந்தை உரிமைப் பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம், குழந்தைகள் உரிமை, பாலியல் குற்றங்கள், குழந்தைத் திருமணம், ஆதரவற்ற மற்றும் காணாமல்போன குழந்தைகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு, பராமரிப்புக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு-லைன் 1098 குறித்து தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கலைப் பயணத் தொடக்க விழாவுக்கு, மதுரை குழந்தைகள் நல பாதுக்காப்புக் குழுத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மனிதம் அறக்கட்டளை இயக்குநர் வனராஜன், கலைப் பயணத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், சைல்டு-லைன் அணி தலைவர் ரசீந்திரக்குமார், உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், கண்ணாயிரம், சாந்தி, சுரேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலர் தேவதாஸ், தலைமையாசிரியர் சிவகுருநாதன், ஒன்றியக் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராமதிலகம் மற்றும் மனிதம் குழந்தைகள் வள மையத்தின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.