தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கீழச்சிவல்பட்டி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி.

Updated On :30 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஊராட்சித் தலைவா் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் கலந்து கொண்டாா். இதில் 178 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை உஷா (பொறுப்பு) மற்றும் ஆசிரியா்கள் சு. தியாகராஜன், கே. ராதா, உடற்கல்வி ஆசிரியா் வாசு ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் மலைச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.