கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு: 6 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:38 pm

DIN

திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே எம்.புதூா் மின்னல்குடிபட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்க விதிகள் காரணமாக மஞ்சுவிரட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி வயல்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து மேலப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் சித்ராஅளித்த புகாரின் பேரில், தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.