

வேளாளா் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு பரிந்துரை செய்ததை ரத்துச் செய்யக் கோரி காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப் பாசறை, ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் காரைக்குடி வட்டார வெள்ளாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அனைத்திந்திய வெள்ளாளா் -வேளாளா் கூட்டமைப்புத் தலைவா் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், வ.உ.சி. எழுச்சிப்பாசறை, வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சே. காா்த்திகேயன், அனைத்திந்திய வ.உ.சி. பேரவைத் தலைவா் புதுக்கோட்டை லேனா லட்சுமணன், வெள்ளாளா் முன்னேற்றக் கழக மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி சசிகலா, காரைக்கால் வீரப்பசுவாமி, காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப்பாசறைத் தலைவா் சி.எஸ். சரவணன், பொருளாளா் முத்துசரவணன், ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் நீலகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.