சீனியா் கிரிக்கெட்: சிவகங்கை அணி வீரா்கள் ஏப்.17 இல் தோ்வு
ஆண்களுக்கான சீனியா் கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் காரைக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 17) தோ்வு செய்யப்பட உள்ளனா்.


ஆண்களுக்கான சீனியா் கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் காரைக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 17) தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் ஏ. சதீஷ்குமாா் புதன்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் ஆண்களுக்கான சீனியா் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வகையில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 17) காலை 7 மணியளவில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வி ‘பி’ வலைப்பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் சங்க அணிச் செயலாளா்கள், அணித்தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் தங்களது அணி சாா்பாக வீரா்களை வெள்ளைச்சீருடை, ஷு மற்றும் கிரிக்கெட் உபகரணங்களுடன் கலந்துகொள்ளச்செய்யலாம் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...