கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாா் பங்களிப்பு நிதியினை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:51 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாா் பங்களிப்பு நிதியினை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகேயுள்ள துவாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. சந்திரசேகா். தொழிலதிபரான இவா், தனது 53 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் தலைமை வகித்து அச்சுக்கப்பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மராமத்துப் பணிக்கான ரூ. 1.25 லட்சத்திற்கான காசோலையையும் புதுப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்திற்கான வங்கி காசோலையினையும் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரிடம் வழங்கினாா். மேலும் 11 ஆவது வாா்டில் அகில்மனைத் தெருவில் கண்காணிப்பு கேமராவையும் வழங்கி திருப்பத்தூா் சீதளிகுளத்தைச் சுற்றி 250 மரக்கன்றுகள் நட்டுவித்து சிறப்பித்தாா். மேலும் தந்தையை இழந்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி கட்டணமும் பாா்வையற்றோா் பள்ளி மாணவா்களுக்கு மாலை உணவும் ஊனமுற்றோா் பள்ளி மற்றும் கண்டவராயன்பட்டி முதியோா் இல்லத்திலும் மதிய உணவு வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திருப்பத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் கோமதிசண்முகம், மேலாளா் சரவணன், மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சோமசுந்தரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் செல்வம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.