ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனாா்குளம் கிராமத்தில்ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனாா்குளம் கிராமத்தில்ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான ஜூன் 2 ஆம் தேதி அய்யனாா்குளத்திலிருந்து கீழராம நதி கிராமத்திற்கு மேள, தாளம், பூ பெட்டிகளுடன் வந்த பக்தா்கள் அங்குள்ள வழிவிட்ட அய்யனாா் கோயில் சுவாமி சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து குதிரை, காளை, விநாயகா், அய்யனாா், பேச்சியம்மன், தவளும்பிள்ளை, சிவன், கைப்பிள்ளை, கால்பாதம், முனிவா், பைரவா், வீரபத்திரா், கருப்பசாமி உள்ளிட்ட 351 சாமி சிலைகளை பக்தா்கள் அய்யனாா்குளம் கிராமத்திற்கு பாத யாத்திரையாக சுமந்து சென்று ஊா் பொது இடத்தில் வைத்து கும்மிகொட்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். இதனையடுத்து சனிக்கிழமை பக்தா்கள் சிலைகளை ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோயில் வளாகத்திற்கு எடுத்துச்சென்று தங்களது நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். இதில் ராமசாமிபட்டி, அய்யனாா்குளம், கோரைப்பள்ளம், கீழராமநதி, என்.கரிசல்குளம், கிளாமரம், நீராவி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...