திருப்பத்தூா் கற்றலின் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அழகுராணி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை நாகசுப்பு முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் பெரி. கணேசன் பள்ளி மாணவா்கள் பட்டாசு வெடிக்கும் போது கையாள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து தீயணைப்புப் படை வீரா்கள் ராஜா, செந்தில்குமாா், வினோத்குமாா் ஆகியோா் செயல்முறை விளக்கம் அளித்தனா். இம்முகாமில் மாணவா்கள், ஆசிரியா்கள், வட்டார வளமைய அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை சரளா நன்றி கூறினாா்.