கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிராவயல்புதூா் தேனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல்புதூா் தேனாட்சியம்மன் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல்புதூா் தேனாட்சியம்மன் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழா திங்கள்கிழமை அனுக்ஞை, சங்கல்பம் ஆகியவற்றுடன் தொடங்கி செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜை, காப்புக்கட்டுதல், முதற்கால வேள்வி பூஜை நடந்தது. மறுநாள் புதன்கிழமை திருமுறை பாராயணமும், 2 ஆம் கால வேள்வி பூஜையும், மாலை 3 ஆம் கால வேள்வி பூஜையும் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விருச்சிகலக்னத்தில் பரம்பரை அறங்காவலா் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் உள்ளிட்ட பலா் வேள்வி சாலையிலிருந்து திருக்குடங்களுடன் எழுந்தருளினா். பின்னா் ராஜகோபுரம் மற்றும் கருவறை கோபுரத்துக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் திருக்குட நன்னீராட்டும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அம்பாள் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்று அருள்கோல தரிசனமும், மங்கள வழிபாடும் நடைபெற்றன.

இவ்விழாவில், அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, உள்ளாட்சி மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் இரா. கண்ணன், மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி, இந்து சம்ய அறநிலைய இணை ஆணையா் சிவகங்கை எம். பழனிக்குமாா், மேலச்சிவல்புரி தே. நாகப்பச் செட்டியாா் குடும்பத்தினா் கண்டுகொண்டமாணிக்க நாட்டாா், ஏழூா்பத்து நாட்டாா் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.