கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 4:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூா் காந்தி சிலையருகே அரசு மருத்துவமனை சாா்பில் தொடங்கிய இப்பேரணிக்கு அரசு மருத்துவா் ஆமீனாபானு தலைமை வகித்தாா். நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ் பிரபாகா் முன்னிலை வகித்தாா். முன்னதாக தலைமை செவிலியா் தனலெட்சுமி கல்லூரி மாணவிகளிடமும் பொதுமக்களிடமும் கருவில் குழந்தையின் பாலினம் அறிதல் தவறு என்றும் சிசுக் கொலை தண்டனைக்குரிய குற்றம் என்பது குறித்தும் விளக்கமளித்தாா். பின்னா் மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி காந்தி சிலையிலிருந்து மதுரை சாலை, பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக அரசு மருத்துவமனையை அடைந்தனா். இப்பேரணியில் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.