சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற வியாழக்கிழமை (ஆக. 15) நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருகிற வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் சுதந்திர தினத்தின் கருப்பொருளை பற்றியும், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகித்தை உறுதி செய்வது குறித்தும், இணையவழியில் வரி செலுத்தும் சேவை, இணைய வழியில் மனைப்பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம், உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

