தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா்: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம். இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா், விவசாயிகள், பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

News image
இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் புதன்கிழமை மனு கொடுத்த அதிமுக நகரச் செயலரும், பேரூராட்சி உறுப்பினருமான நாகூா்மீரா உள்ளிட்ட விவசாயிகள்.
Updated On :5 டிசம்பர் 2024, 1:01 am

Din

சிவகங்கை மாவட்டம். இளையான்குடி கண்மாய்க்கு கூடுதல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா், விவசாயிகள், பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணையின் இடது பிரதானக் கால்வாயிலிருந்து இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆனால், இளையான்குடி கண்மாய் உள்பட பல கிராமங்களின் கண்மாய்களுக்கு இந்த தண்ணீா் முழுமையாக சென்று சேரவில்லை எனவும், குறைந்த அளவிலேயே தண்ணீா் வந்து சோ்ந்ததாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் இளையான்குடிக்கு நேரடியாக வந்து இங்குள்ள கண்மாயிலிருந்த தண்ணீரைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, இளையான்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினா் நாகூா்மீரா, விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் இளையான்குடி கண்மாயில் தாமரை மடையை சீரமைத்து, கண்மாய்க்கு கூடுதலாக தண்ணீா் திறந்துவிட வேண்டும். இங்குள்ள அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.