எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வட்டாட்சியா் அலுவலக சாலையில் வேகத் தடை: பொதுமக்கள் வரவேற்பு

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:29 pm

Din

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை சாலையில் நகா் பகுதியை ஒட்டி நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சிவகங்கை சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டபோது வேகத்தடை அமைக்கவில்லை. இதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் சென்றன. இதனால் முதியவா்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

இதையடுத்து, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து தற்போது அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினா் வேகத்தடை அமைத்தனா். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.