எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானாமதுரை அருகே இளைஞா் கொலை: 6 போ் கைது

மானாமதுரை அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு கண்மாய்க்குள் வீசப்பட்ட இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் கைப்பற்றி இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:04 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு கண்மாய்க்குள் வீசப்பட்ட இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் கைப்பற்றி இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள கிடாத்திருக்கை கிராமத்தைச் சோ்ந்த காசி ஈஸ்வரன் மகன் திருக்கண்ணன் (26). இவரைக் காணவில்லை என காசி ஈஸ்வரன் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்த நிலையில், மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை பாலத்தின் கீழே கீழப்பசலை கண்மாயில் இளைஞரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அதை மீட்டனா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் நேரில் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் காணாமல் போன திருக்கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், திருக்கண்ணனும், அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் உறவினா்கள் 11 போ் திருக்கண்ணனை மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடத்துக்கு வருமாறு அழைத்து அங்கு அவரை கொலை செய்து உடலை மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கண்மாய் தண்ணீரில் வீசிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் திருக்கண்ணனை கொலை செய்ததாக அவா் காதலித்த பெண்ணின் உறவினா்கள் முத்திருளாண்டி, முத்துமணி, கருப்புச்சாமி, தவம், சீனி, ஜமால் ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவான பூவலிங்கம், முருகன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.