மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On :12 டிசம்பர் 2024, 9:51 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயலட்சுமி (36). இவா் வியாழக்கிழமை காலை விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக வயல்வெளிக்கு சென்றாா்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அதை மிதித்த போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...