எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:51 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயலட்சுமி (36). இவா் வியாழக்கிழமை காலை விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக வயல்வெளிக்கு சென்றாா்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அதை மிதித்த போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.