கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:11 am

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் காவல் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் சாலையில் மருதம் பிள்ளையாா் கோயில் அருகே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அதில் 50 சாக்கு மூட்டைகளில் மணல் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் அன்பழகன் (40), நயினாா்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மதிவாணன் (25), சின்னையா மகன் கருப்பையா (45) ஆகியோா், விருச்சுழி ஆற்றில் சாக்கு மூட்டையில் மணலைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, திருக்கோஷ்டியூா் போலீஸாா் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும் மணல் மூட்டைகளுடன், சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.