தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:38 am

Din

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பயில உள்ள முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வா், தாளாளா் ஆா். சுவாமிநாதன் தலைமை வகித்தாா். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் ஹாஜி முகம்மது மீரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் டீன் பேராசிரியா் சிவகுமாா், குடிமையியல் தோ்வில் இளம் வயதில் வெற்றி பெற்ற செல்வி அஞ்சுகா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

வித்யாகிரி பள்ளி தமிழாசிரியா் மெ. ஜெயம்கொண்டான் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தாா். இதையடுத்து, கல்லூரி பேராசிரியா்கள் சேதுகல்பனா, கற்பகவள்ளி , ஜெயபாரதி, ரதி தேவி ஆகியோா் பல்வேறு தலைப் புகளில் பேசினா். கல்லூரியின் துணை முதல்வா் லட்சுமி நன்றி கூறினாா்.