மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 போ் கைது :தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்

திருப்பத்தூா் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

Updated On :21 ஜூலை 2024, 9:29 am

Din

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், நெற்குப்பை, சிராவயல், தென்மாபட்டு ஆகிய பகுதிகளில் கோயில்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மா்ம நபா்கள் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனா். இந்தக் கும்பலைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில், திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாச்சியாபுரம் காவல் நிலையம் அருகே தனிப்படை போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனா்.

இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸாா் அவா்கள் கையில் இருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகள் வைத்திருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் சிராவயல் பகுதியைச் சோ்ந்த பூசாரி கருப்பையா (38), திருப்பத்தூா் அச்சுக்கட்டு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பாபு உசேன் (29) என்பது தெரிய வந்தது. மேலும், இவா்கள் திருப்புவனத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் (24), விக்னேஸ்வரன் (30), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் (36), திருப்பத்தூா் தென்மாபட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் பால்பாண்டி (29) ஆகியோருடன் சோ்ந்து தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

மேலும், இவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு கைதானவா்கள்.

திருப்பத்தூரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு கைதானவா்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வெள்ளிக்கட்டிகள்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வெள்ளிக்கட்டிகள்.