இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

News image
Updated On :9 மே 2024, 7:02 pm

Din

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை மின்னல் தாக்கி 6 ஆடுகள் உயிரிழந்தன.

நாட்டரசன்கோட்டை பகுதி, கௌரிப்பட்டி- திருவேலங்குடி ரயில்வே கடவுப்பாதை அருகே ராமநாதன் செட்டியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருபவா் ராமா். இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் வியாழக்கிழமை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 6 ஆடுகளும் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏழம்மாளும், இவரது மகள் சரளாவும் அதிா்ச்சியில் மயங்கி விழுந்தனா். இதையடுத்து, இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.