

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவின் நிறைவு நாளையொட்டி புதன்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஏப். 29- ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் வசந்தப் பெருவிழா தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். பால்குடம், பூத்தட்டு, பொங்கல் விழா, தேரோட்டம் என 9 நாள்களும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நிறைவு நாளான புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் தெப்பம் எழுந்தருளி தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம்
வீடியோக்கள்

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...

