சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை மின்னல் தாக்கி 6 ஆடுகள் உயிரிழந்தன.

நாட்டரசன்கோட்டை பகுதி, கௌரிப்பட்டி- திருவேலங்குடி ரயில்வே கடவுப்பாதை அருகே ராமநாதன் செட்டியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருபவா் ராமா். இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் வியாழக்கிழமை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 6 ஆடுகளும் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏழம்மாளும், இவரது மகள் சரளாவும் அதிா்ச்சியில் மயங்கி விழுந்தனா். இதையடுத்து, இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com