பூமாயி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவின் நிறைவு நாளையொட்டி புதன்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 29- ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் வசந்தப் பெருவிழா தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். பால்குடம், பூத்தட்டு, பொங்கல் விழா, தேரோட்டம் என 9 நாள்களும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நிறைவு நாளான புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் தெப்பம் எழுந்தருளி தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com