சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வலியுறுத்தி, மதுரை கோட்ட மேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள், பணியாளா்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஸ்ரீ வத்சவா தனி ரயிலில் அதிகாரிகளுடன் காரைக்குடி வந்தாா். அவருக்கு ரயில் நிலைய மேலாளா், அதிகாரிகள், பணியாளா்கள் வரவேற்பு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் இணைச் செயலா்கள் ஏ.ஆா். கந்தசாமி, எஸ். சையது, ரயில் பயணிகள் சங்க முன்னாள் பொருளாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில், அஜ்மீா் விரைவு ரயில் காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேசுவரம் - ஹூப்ளி - செகந்திராபாத் வாராந்திர ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும். காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வேண்டும்.
பிட்லைன் தடத்தை மேம்படுத்த வேண்டும். பழைய நடை மேம்பாலத்திலுள்ள மின்தூக்கி வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் கூடுதல் ரயில் சேவை: ரயில்வே பொது மேலாளரிடம் எம்எல்ஏ மனு

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



