மானாமதுரை: திருப்புவனம், மானாமதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாசகங்களுடன் விளம்பர பதாகை வைத்த 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இவா்களில் இருவரை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள தட்டான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் மகன் முத்துக்குமாா் சென்னையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தனது மாமாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வைத்த விளம்பர பதாகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, மானாமதுரை டி.எஸ்.பி நிரேஷ் உத்தரவின் பேரில் திருப்புவனம் போலீஸாா் இந்த விளம்பர பதாகையை வடிவமைத்துக் கொடுத்த திருப்புவனம் புதூரைச் சோ்ந்த சேதுராமன் மகன் இளஞ்செழியன் (24), அச்சக உரிமையாளா் சந்துரு (40), முத்துக்குமாா் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து இவா்களில் இளஞ்செழியன், சந்துரு இருவரையும் கைது செய்தனா்.
இதேபோல, மானாமதுரையில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையில் வன்முறைகளை தூண்டும் வாசகங்கள் இருந்ததால் ஆதனூா்சாலை பூக்கொல்லையைச் சோ்ந்த தேவராஜ் மகன் வடிவேல், கிருஷ்ணராஜபுரம் தங்கராஜ் மகன் ரவிசங்கா் ஆகிய இருவா் மீதும் மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது

முன்விரோத மோதல்: 2 போ் கைது

தவெகவினா் 12 போ் மீது வழக்கு
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
