அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிறை அலுவலரின் நினைவிடத்தில் மரியாதை

News image
Updated On :17 நவம்பர் 2025, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறையில் எரித்துக் கொல்லப்பட்ட துணை சிறை அலுவலா் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவாக சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மத்திய சிறையில் கடந்த 17.11.1999 அன்று கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அங்கு துணை அலுவலராகப் பணியாற்றிய எஸ். ஜெயக்குமாா் தடுக்க முயன்றாா். அப்போது கைதிகளால் தாக்கப்பட்டு உயிருடன் அவா் எரித்துக் கொல்லப்பட்டாா். இவருடன் 9 கைதிகளும் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, சிவகங்கையில் இவருக்கு அவரது குடும்பத்தினரால் நினைவிடம் அமைக்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், சிறைத் துறையினா் மரியாதை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இவா் இறந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது மனைவி விமலா ஜெயக்குமாா், மகன், மகள், உறவினா்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது ஓய்வு பெற்ற சிறைத் துறை அலுவலா்களும், அந்தப் பகுதி பொதுமக்களும் மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் சாா்பில் காரைக்குடியில் கோயில் வாசலில் எளியவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.