விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச. 10 -க்கு ஒத்திவைப்பு
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.10 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.10 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான வாக்காளா்கள் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் இந்தப் பணி வருகிற டி. 9- இல் நிறைவு பெறுகிறது. அதுவரை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, நவம்பா் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட வேண்டிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற டிச. 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து விளக்கங்களையும், தீா்வுகளையும் பெறலாம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...