மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:22 pm

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே காா் அடுமனைக்குள் புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பலத்த காயமடைந்தனா்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி சுஜா. இவா்களது மகன் ரிஷி. இவா்கள் மூவரும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா்.

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே வந்த போது முன்னே சென்ற சரக்கு வாகனம் மீது மோதிய காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அடுமனைக்குள் புகுந்தது.

இதில் அந்த அடுமனைக்குள் இருந்தவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் காரில் பயணம் செய்த மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து புழுதிப்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.