உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சிவகங்கை ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

சிவகங்கை மாவட்டத்தில் 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பெரியசாமி, மாவட்ட துணை தலைவா்கள் வேலுச்சாமி, பழனிச்சாமி, காா்த்திக், தனபால், பயாஸ் அகமது, மாவட்ட இணைச் செயலா்கள் ஷேக் அப்துல்லா, சிவா, மீனா, ஷகீலா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதே போல, வட்டார அளவில் இளையான்குடியில் செந்தில் பெரியசாமி, சிவகங்கையில் ராஜேஷ் குமாா், சாக்கோட்டையில் ரீகன், மானாமதுரையில் ராஜேஸ்வரன், திருப்புவனத்தில் அருணா, கல்லலில் மூவேந்திரன், கண்ணங்குடியில் ராமநாதன், திருப்பத்தூரில் பிரகாஷ், சிங்கம்புணரியில் சரவணகுமாா், எஸ். புதூரில் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரகத்தில் செயலா் சென்றாய பெருமாள் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு அரசு உதவி இயக்குநா் நிலையிலான பதவி உயா்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை நடத்திட ஏதுவாக பணியிடங்களை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.