சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை ஒருவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெகநாதனின் உடலை புதன்கிழமை தானம் வழங்கிய அவரது உறவினா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை ஒருவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்த கே. ஜெகநாதன், மருத்துவக் கல்விக்கும் சமூக நலனுக்கும் பங்களிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது உடலை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா். அவரது இறுதி விருப்பத்தின்படி, அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மகள் கவிதா ஜெகநாதன், மருமகன் கதிரவன், பேரன்கள் முனுசாமி, காவியன், க்ரிதின், பேத்தி கெளஷிகா உள்ளிட்ட குடும்பத்தினா், ஜெகநாதனின் உடலை புதன்கிழமை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் ஒப்படைத்தனா்.

உடலை மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் தமிழ்வாணன், உடற்கூறு இயல் துறைத் தலைவா் கற்பக ஜோதி, இணைப் பேராசிரியா் பாரதி ராணி, நிலைய மருத்துவா் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவா்கள் தென்றல், வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளா் ரமேஷ் கண்ணன், லயன்ஸ் சங்கத்தைச் சோ்ந்த எஸ்.கே.எஸ். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.