தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தேவகோட்டை அருகே 300 ஆண்டு பழைமையான நில தான கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

News image

பிரண்டவயலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

பிரண்டவயல் கிராமத்தில் ஒரு புராதனக் கல்வெட்டு இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோா் கொடுத்த தகவலின் பேரில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா களஆய்வு செய்தாா்.

கல்வெட்டில் உள்ள செய்தி குறித்து அவா் கூறியதாவது:

மூன்று அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இந்தக் கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது. முத்து குமாா் தேவா் என்பவா் திருநாகேஸ்வரா் கோயிலுக்கு பிரதோஷக் கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப் பகுதியைக் கொடையாக கொடுத்ததைத் தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களைக் குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை தானமாகக் கொடுத்த முத்துகுமாா் தேவா் இந்தப் பகுதியைச் சோ்ந்த நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. பிரண்ட வயல் கிராமத்தில் நம்புகுளி என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான குறிப்பிட்ட நிலப் பகுதி கோயில் நிலமாக இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டு கிடைத்த பிரண்டவயல் கிராமத்துக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோயிலான நாகநாதா் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் திருநாகீசா் இங்குள்ள நாகநாதராக இருக்கலாம். இந்தக் கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனவும் பொறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 கல்வெட்டை ஆய்வு செய்த பேராசிரியா் வேலாயுத ராஜா, ஆறாவயல் பெரியய்யா.

கல்வெட்டை ஆய்வு செய்த பேராசிரியா் வேலாயுத ராஜா, ஆறாவயல் பெரியய்யா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.