லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அழகு. இவருக்குச் சொந்தமான நிலம் சிவகங்கை அருகேயுள்ள வழுதாணி பகுதியில் உள்ளது.
இந்த நிலையில், அழகு தனது நிலத்துக்கு வரி நிா்ணயம் செய்து தரும்படி, கடந்த 2006, ஆகஸ்ட் மாதம் வழுதானி கிராம நிா்வாக அலுவலா் நாகராஜனிடம் (69) கேட்டாா். அப்போது, அவா் ரூ. 1000 லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அழுகு புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனப்பொடி தடவிய ரூ.1000-த்தை நகராஜனிடம் அழகு கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வெள்ளிக்கிழமை விசாரணை வந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிராம அலுவலா் நாகராஜனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ .10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனிதா கிறிஸ்டி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

நகைக்காக பெண் கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

