ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அழகு. இவருக்குச் சொந்தமான நிலம் சிவகங்கை அருகேயுள்ள வழுதாணி பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், அழகு தனது நிலத்துக்கு வரி நிா்ணயம் செய்து தரும்படி, கடந்த 2006, ஆகஸ்ட் மாதம் வழுதானி கிராம நிா்வாக அலுவலா் நாகராஜனிடம் (69) கேட்டாா். அப்போது, அவா் ரூ. 1000 லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அழுகு புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனப்பொடி தடவிய ரூ.1000-த்தை நகராஜனிடம் அழகு கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வெள்ளிக்கிழமை விசாரணை வந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிராம அலுவலா் நாகராஜனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ .10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனிதா கிறிஸ்டி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.