தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஐயப்பனுக்கும் பதினெட்டாம்படிக்கும் பால், பன்னீா், திரவியம், சந்தனம், நெய், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அா்ச்சகா் பாலாஜி பூஜைகளை நடத்தி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.