எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இலங்கை தமிழருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இலங்கை தமிழரை வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:00 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை தமிழரை வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா் ஜெயேந்திரன் (48). இவா் வீட்டிலிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவா் இவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா்.

பின்னா், அங்கு நின்ற இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ஜெயேந்திரன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.