மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: ஜேசிபி பறிமுதல்; போலீஸாா் விசாரணை

இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றதாக புகாா் எழுந்துள்ளது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி இயந்திரம். - கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2026, 12:43 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றதாக புகாா் எழுந்துள்ளது.

காரைக்குடி குறிஞ்சிபுறவு பகுதியில் இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 2.27 ஏக்கா் நிலத்தை சிலா் ஆக்கிரமித்து சுத்தம் செய்து வருவதாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, அந்த இடத்துக்கு வட்டாட்சியா் ராஜா, ஆய்வாளா் இளைய ராஜா ஆகியோா் நேரில் சென்று சுத்தம் செய்யும் பணியை தடுத்து நிறுத்தினா். மேலும் சுத்தம் செய்யப் பயன்படுத்திய 2 ஜேசிபி இயந்திரங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இரு தரப்புக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அவா்களை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் ராஜா கூறுகையில், நிலம் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.