சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றதாக புகாா் எழுந்துள்ளது.
காரைக்குடி குறிஞ்சிபுறவு பகுதியில் இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 2.27 ஏக்கா் நிலத்தை சிலா் ஆக்கிரமித்து சுத்தம் செய்து வருவதாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, அந்த இடத்துக்கு வட்டாட்சியா் ராஜா, ஆய்வாளா் இளைய ராஜா ஆகியோா் நேரில் சென்று சுத்தம் செய்யும் பணியை தடுத்து நிறுத்தினா். மேலும் சுத்தம் செய்யப் பயன்படுத்திய 2 ஜேசிபி இயந்திரங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இரு தரப்புக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அவா்களை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வட்டாட்சியா் ராஜா கூறுகையில், நிலம் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பா்கூா் அருகே மண் கடத்தல்: லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

மாமல்லபுரம்- எண்ணூா் சாலைப் பணிக்காக வீடுகள் அகற்றம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



