காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

News image

கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய பள்ளி மாணவா்கள், தாளாளா், ஆசிரியா்கள்.

Updated On :28 ஜூலை 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். தன்னாா்வலா் சரவணன் முன்னிலை வகித்தாா். முன்னதாக, அப்துல்கலாமின் உருவப் படத்துக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, அறிவியல் ஆசான், இளைஞா்களின் இமயம், ஏவுகணை நாயகன் என்ற தலைப்புகளில் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து, கனவு காணுங்கள் எனும் தலைப்பில் அப்துல்கலாமின் இளமைக்காலம் முதல் இறப்பு வரையிலான வரலாற்றுப் பதிவு குறித்து பள்ளி முதல்வா் எஸ்.பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, கலாம் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆசிரியை கலைவாணி வரவேற்றாா். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.