இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

உணவகத்தில் தகராறு: காவலா் உள்பட இருவா் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 12:40 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா்-காரைக்குடி சாலையில் மாரிமுத்து (60) உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு திருப்பத்தூா் நகா் காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரும், காவலருமான மெல்வின் (28), இவரது நண்பா் சண்முகம் (30) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா். அப்போது, இவா்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா்களுக்கும் கடை உரிமையாளா் மாரிமுத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த காவலா் மெல்வின், சண்முகம் இருவரும் அருகில் கிடந்த புட்டியை எடுத்து உணவகத்துக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரிமுத்து நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், காவலா் மெல்வின், சண்முகம் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.