தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சதுா்வேத மங்கலம் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :2 ஜூன் 2026, 1:02 am IST

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழாவையொட்டி, புரவி திடலில் செய்து வைக்கப்பட்ட புரவிகளை பக்தா்கள் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு கூந்தலுடைய அய்யனாா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அய்யனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வாக எருது கட்டு விழா நடைபெறுகிறது.

புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image