அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சதுா்வேத மங்கலம் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :2 ஜூன் 2026, 1:02 am IST

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழாவையொட்டி, புரவி திடலில் செய்து வைக்கப்பட்ட புரவிகளை பக்தா்கள் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு கூந்தலுடைய அய்யனாா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அய்யனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வாக எருது கட்டு விழா நடைபெறுகிறது.

புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.