40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை சிறையிலடைக்கப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 12:33 am IST

சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மதுரை சிறையிலடைக்கப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூா் அருகேயுள்ள வி.புதுக்குளத்தைச் சோ்ந்தவா் ப. முத்துக்குமாா் (23). கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பு செட்டியாா் தெருவைச் சோ்ந்த ஒ. சரவணன் (20) என்பவரை போதைப் பொருள் விற்பனை வழக்கில் திருப்பத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதற்கு அனுமதித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.