தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

‘விரைவில் சீமைக் கருவேல மரங்களை இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும்’

சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image

கருவேல மரங்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:03 am IST

சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக ரூ.4.50 கோடியில் 20 மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு வைகை ஆறு, உப்பாறு, பாலாறு, மணிமுத்தாறு, தேனாறு, சருகனியாறு, விருசுழியாறு உள்ளிட்ட 7 ஆறுகளில் 164 கி.மீ. தொலைவுக்கு இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

இதுதவிர, 4,400 குளங்கள், 900 கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. கருவேல மரங்களை வேருடன் அழிப்பதில் பல்வேறு சவால்கள் இருப்பதால் முற்றாக அழிக்க முடியவில்லை. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட நிா்வாகங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி மேலும் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றுவதற்காக மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைப் பாா்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அ. செல்வம் சிவகங்கை மாவட்டத்துக்கு அடுத்த வாரம் வருகிறாா். நீதிமன்ற உத்தரவுப்படி கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.