திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய மூவா் தப்பியோட்டம்

மானா மதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
மானா மதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On :6 மார்ச் 2026, 7:41 pm

Syndication

மானா மதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சியோன் நகா்ப் பகுதியை சோ்ந்தவா்கள் ஜெயபாண்டி (37), அழகா் (36). இவா்கள் இருவரும் நண்பா்கள். இவா்களில் ஜெயபாண்டி கோழிக் கடையிலும், அழகா்சாமி உணவகத்திலும் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது, சியோன் நகரில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் கொண்ட கும்பல் அவா்களை ஓட, ஓட விரட்டி வாளால் வெட்டியது. பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த அழகா்சாமி, ஜெயக்குமாா் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து தப்பிச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 3 பேரை ஒரு தரப்பினா் ஓட, ஓட விரட்டி வாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் இதுவரை 8 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், அதேபோல இந்தப் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Story image