100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்டத் தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி. உடன் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா.








