‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

காளையாா்கோவில் அருகே முத்தூா்வாணியங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :23 மே 2026, 2:50 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் வட்டம், முத்தூா்வாணியங்குடி அடைக்கலம் காத்த அம்மன், கண்மாய்க்கரை முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் மைதானத்தில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 18 காளைகள் பங்கேற்றன. 162 மாடு பிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை, ஊத்திகுளம், கருதுப்பட்டி, வாக்காட்டுப்பட்டி, குருவாடிப்பட்டி, கீரனூா், கொல்லங்குடி, செங்குளிப்பட்டி, கவுரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.