மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தேவாரம் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்

தேனியில் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து புதன்கிழமை, அப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மனு அளித்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:02 am

DIN

தேனியில் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து புதன்கிழமை, அப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மனு அளித்தனர்.
தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப் பிரிவில் படிக்கும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாக புகார் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.
இப் பிரச்னை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திகுச் சென்று, அங்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மாணவ, மாணவிகள் புகார் மனு அளித்தனர்.
இந்தப் புகார் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.