அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன  ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:18 am

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன  ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 இந்த அலுவலகத்தில்  வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது,  புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு  அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட  இடைத்தரகர்கள் மூலம் அதிகளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான 4 தனிப்படை போலீஸார்  புதன்கிழமை பகல் 2 மணிக்கு உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்  அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
6 மணி நேரம் சோதனை: பகல் 2 மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு 8 வரை 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில்  வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்ட அரசு நிர்ணயித்த  கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1,41, 205  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறும் போது, கணக்கில் வராத இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் மீது வழக்குப்  பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.